பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர், எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள் இன்று (மே 2, 1844).
எலைஜா ஜெ. மெக்காய் (Elijah J. McCoy) மே 2, 1844ல் கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில் ஜார்ஜ், மில்டிரட் தம்பதியர்க்கு பிறந்தார். எலைஜா ஜெ. மெக்காய், ஐக்கிய அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார். சிறு வயது முதலே இயந்திரங்கள் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்த எலைஜாவின் பெற்றோர், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து தப்பி வந்த அடிமைகளாக இருந்துள்ளனர். மீண்டும், 1847ல் அவரது குடும்பம் அமெரிக்கா சென்று மிச்சிகனில் குடியேறியது. அக்காலகட்டத்தில், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் படிப்பது சிரமம் என்பதால், அவரது பெற்றோர் 15 வயது மகனை இசுக்கொட்லாந்தின் எடின்பரோ நகருக்கு அனுப்பினர். அங்கு படித்து இயந்திரவியல் பொறியாளராக தகுதி பெற்று, ஊர் திரும்பிய மெக்காய் திறன்மிக்கவராக இருந்தும், கறுப்பினத்தவர் என்பதால் ஏற்ற வேலை கிடைக்கவில்லை.
தற்காலிகமாக, மிச்சிகன் மத்திய ரயில்வே துறையில் தீயணைப்பு வீரராகவும், இயந்திரத்திற்கு (engine) எண்ணெய் (Oil) போடும் பணியாளராகவும் வேலை செய்தார். எலைஜா, தனது பணியை மட்டுமே பார்த்துக்கொண்டிராமல், இயந்திரம் இயங்கும் முறையை ஆராய்ந்தவாறே இருந்தார். நீராவி இயந்திரங்களுக்கு எண்ணெய் (ஆயில்) இடுவதற்கான ‘எண்ணெய் சொட்டு கோப்பை’ (Oil-trip cup) என்ற தானியங்கி உயவிடுவான் (Automatic Lubricator) ஒன்றை கண்டறிந்தார். அது இயந்திரத்தின் ஓடும் பாகங்களில் சமமாக எண்ணெய் ஊடுருவுமாறு செய்தது. மேலும் இயந்திரம் சூடாகாமல், தடையின்றி தொடருந்து நெடுநேரம் தொடர்ந்தோட இது வழிவகுத்தது. அந்த எண்ணெய் சொட்டு கோப்பைக்கான காப்புரிமையை ஜூன் 23, 1872ல் நாளன்று ஐக்கிய அமெரிக்க நாட்டின் காப்புரிமை அலுவலகத்திடமிருந்து பெற்றார்.

இவரது கண்டுபிடிப்பு சாதாரணமானது என்றாலும், இது தொடர்வண்டிகளை விரைவாக ஓடச் செய்து, அஞ்சல், பொட்டலம் (Parcel) போன்ற சேவைகளை துரிதமாக்கி, அத்தொழிலையே லாபகரமாக மாற்றியது. தன் பொறியியல் திறனைப் பயன்படுத்தி இயந்திரங்களில் பல மேம்பாடுகளைச் செய்த மெக்காய், தொடர்ந்து தான் கண்டறிந்த கருவிகளை மேம்படுத்தினார். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இரும்புப் பலகை(ironing board), நீர் தெளிப்பான்(sprinkler), காலணிகளுக்கான குதிகால் மீள்மம்(Rubber Heel) என பலவற்றைக் கண்டறிந்ததோடு, அனைத்துக்கும் காப்புரிமை பெற்றார். இவர் கண்டறிந்த சாதனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உயவிடுவான் வகையோடு தொடர்பானவையாகும்.

கறுப்பினத்தவரில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றுக்கான காப்புரிமை பெற்றவர் என்று போற்றப்பட்ட எலைஜா ஜெ. மெக்காய், 1909-ல் புக்கர் டி வாஷிங்டன் என்பவர் எழுதிய ‘ஸ்டோரி ஆஃப் தி நீக்ரோ’ (Story of the Negro) என்ற புகழ்பெற்ற நூலில் உள்ளது. அதேநேரம், கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, பெரிய அளவில் அங்கீகாரம் மறுக்கப்பட, அதைப் பற்றி கவலைப்படாத எலைஜா, ஏறக்குறைய 50 சாதனங்களுக்கு காப்புரிமை பெற்றார். தான் கண்டறிந்த உயவிடுவான் (Lubricator) சாதனங்களை உற்பத்தி செய்ய முதலீடு இல்லாததால், தனது முதலாளிகள், முதலீட்டாளர்களிடம் இவற்றுக்கான உரிமங்களை விற்றுவிட்டார். இதனால், இவர் கண்டறிந்த பல சாதனங்கள் பற்றிய குறிப்புகளில் கண்டுபிடிப்பாளராக இவரது பெயர் இடம்பெறவில்லை. இறுதியாக, தான் கண்டறிந்தவற்றை உற்பத்தி செய்வதற்காக 1920ல் தன் பெயரில் ஒரு தொழிற்சாலை தொடங்கினார். அங்கு இவரது பெயர் தாங்கிய உயவிடுவான் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தவரும், உயவிடல் நுட்பத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான எலைஜா ஜே.மெக்காய் ஒரு நான்கு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்தார். அதில் இருந்து முழுமையாக குணமடையாமலே அக்டோபர் 10, 1929ல் தனது 85-வது அகவையில், ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ள மிச்சிகன் மாநிலம் டிட்ராயிட் பெருநகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]