பல அறிவியல் கருவிகளை கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8, 1732).
டேவிட் ரிட்டன்ஹவுஸ் (David Rittenhouse) ஏப்ரல் 8, 1732ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள பேப்பர் மில் ரன் என்னுமிடத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமையின் காரணமாக முறையாக பள்ளிக்கு செல்ல இயலாத ரிட்டன்ஹவுஸ். கணிதம், இயந்திரங்கள் குறித்து டேவிட் வில்லியம்ஸ் மாமாவிடம் கற்றறிந்தார். அவர் தன்னிடம் இருந்த சில புத்தகங்கள், மாற்றும் பல கருவிகள் அடங்கிய பெட்டியையும் கொடுத்தார். தனது கைத்தொழிலான மரவேலைகளை செய்துகொண்டே அளவற்ற கணிதப் புத்தகங்கள் படித்தவர் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படித்து ஆழமான இயற்பியல் அறிவையும், கோட்பாடு மற்றும் கண்காணிப்பு வானியலில் அபாரத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.

அறிவுக்கூர்மை மிக்க டேவிட், நீர் ஆலையின் மாதிரி ஒன்றை 8 வயதில் வடிவமைத்தார். மேலும், 17 வயதில், முதலில் ஒரு மர கடிகாரத்தையும், பின்னர் ஒரு பித்தளை கடிகாரத்தையும் உருவாக்கினார். தந்தையின் வயலில் ஒரு ஆய்வுகூடத்தை தொடங்கி. அங்கு உயரமான, துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரங்களை தயாரித்து விற்றார். ஜெனித் சுற்றுக்கண்டம் (Zenith Sector), தொலைநோக்கி (Telescope) போன்ற வானியல் ஆய்வுகளுக்கான கருவிகளை உருவாக்கினார். அளவுருக்கள் (Parameters), உலோக உறை வெப்பமானி (Metallik Pocket Thermometer), ஹைக்ரோமீட்டர் (Haikrometers) உள்ளிட்ட கருவிகளையும் தயாரித்தார். இவை 1770-களில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிகம் விற்பனையாகின. பல்வேறு வகையான திசையறி கருவிகளை (Compass) தயாரித்த ரிட்டன்ஹவுசு, வெர்னியர் கண்காணிப்பு திசையறி கருவியையும் (Vernier Tracking Compass) உருவாக்கியவர் என கூறப்படுகிறது. தேசிய பொது நிலங்களை கணக்கெடுக்க, இவரது பெயரிலான ‘ரிட்டன்ஹவுஸ் மேம்படுத்தப்பட்ட திசையறி கருவிகளை’ அரசு பயன் படுத்தியது. இதன் காரணமாக டேவிட் ரிட்டன்ஹவுசை பிலடெல்பியா நகர சர்வேயராக 1774ல் நியமிக் கப்பட்டார்.

வானியல் கண்காணிப்புக்காக அமெரிக்க தத்துவவியல் சங்கம் (American Philosophical Society) ஒருசில இடங்களில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்தன. இவற்றில் ஒன்று இவரது வீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளை இவர் தனக்காகவும், மற்ற கண்காணிப்பாளர்களுக்காகவும் தயாரித்தார். இதற்காக இவர் தயாரித்த தொலைநோக்கிதான் அமெரிக்காவின் முதல் தொலைநோக்கி என்று கருதப்படுகிறது. டேவிட் ரிட்டன்ஹவுஸ் மற்ற நடுவங்களிலும் வானியல் கண்காணிப்புகளுக்காக கருவிகளைப் பொருத்த உதவி செய்தார். பிலடெல்பியாவில் 1770ல் நிரந்தரமாகக் குடியேறிய அவர், அங்கு மற்றொரு கண்காணிப்பு நிலையம் அமைத்து, தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டார். புதன் (Mercury), வியாழன் (Jupiter), யுரேனசு (Uranus) ஆகிய கோள்களின் பாதைகளைக் கண்காணித்த டேவிட், விண்கற்கள், வால்நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்தும் ஆராய்ந்தார். இதன்மூலம், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

‘ஆன் ஈஸி மெத்தட் ஃபார் டிடக்டிங் தி ட்ரூ டைம் ஆஃப் தி சன்ஸ் பாசிங் தி மெரிடியன்’ என்ற நூலை வெளியிட்டார். காந்த சக்தி, மின்சாரம் குறித்த சோதனைகளை 1784ல் மேற்கொண்டார். தனது முதல் கணிதக் கட்டுரையை 1792ல் வெளியிட்டார். பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. பல்வேறு அரசுப் பதவிகள் இவரைத் தேடிவந்தன. படித்துப் பெரிய பட்டங்களைப் பெறாமலேயே தனது திறமையால் பல சாதனை களை நிகழ்த்தியவரும், 18-ம் நூற்றாண்டின் முன்னணி வானிய லாளருமான டேவிட் ரிட்டன்ஹவுஸ் ஜூன் 26, 1796ல் தனது 64வது அகவையில் பென்சில்வேனியா அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
[07/04, 19:23] திருச்சி பேராசிரியர் p ramesh704: நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்த, மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1992).
டேனியல் போவே (Daniel Bovet) மார்ச் 23, 1907ல் சுவிட்சர்லாந்தில் சுவிட்சர்லாந்தில் பிறந்து இத்தாலிக்கு குடிபெயர்ந்தார். 1927ல் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1929ல் முனைவர் பட்டம் பெற்றார். 1937 ஆம் ஆண்டில் ஆன்டி ஹிஸ்டமைன் கண்டுபிடித்தார். மேலும் இது நியூட்ரோ ட்ரான்ஸ்மீட்டாரை ஹஸ்டமைன் தடுக்கும் மருந்தாகவும், ஒவ்வாமை மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவருடைய ஆராய்ச்சிகளில் கீமோதெரபி, சல்ஃபா மருந்துகள், சிம்பத்தடிக் நரம்பு மண்டலம், போன்றவற்றிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்தமைக்காக 1957ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
1965ல் புகைபிடிப்போரின் அறிவுத்திறன் வளர்கிறது என்ற ஆய்வை தனது ஆய்வுக் குழு மூலம் முன்வைத்தார். 1929 முதல் 1947 வரை பாரிஸில் உள்ள பாஸ்டியர் நிருவனத்தில் பணியாற்றினார். 1947 முதல் ரோமின் தேசிய சுகாதார நிருவனத்தில் பணியாற்றினார். 1964ல், சசாரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். 1969 முதல் 1971 வரை ரோமின் தேசிய ஆராய்ச்சிக் கவுன்சிலிலும் பின் 1982 வரை ரோமின் சாபியென்ஸா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே ஏப்ரல் 08, 1992ல் தனது 85 வது வயதில் ரோம், இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]