மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் நினைவு நாள் இன்று (மே 7, 2011).
வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் (Willard Sterling Boyle) ஆகஸ்டு 19, 1924ல் கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் உள்ள ஆம்ஃகெர்சுட்டு (Amherst) என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று அகவை இருக்கும் பொழுது இவர் பெற்றோர்களுடன் இவர் கியூபெக் மாநிலத்துக்கு இடம் மாறினார். இவர் தன் 14 ஆம் அகவை வரை வீட்டிலேயே தன் தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டு பின்னர் மான்ட்ரியாலில் உள்ள கீழக கனடா கல்லூரியில் (Lower Canada College) சேர்ந்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் படிப்பு 1943ல் சற்று தடைபட்டு பின்னர் இரண்டாம் உலகப்போரின் பொழுது அரசக் கனடிய கடற்படையில் (ராயல் கனடிய நேவியில்) சேர்ந்தார். பின்னர் இவர் பிரித்தானிய அரச கடற்படைக்கு மாற்றப்பட்டு அதில் வானூர்தி தாங்கிக் கப்பலில் சுபிட்ஃவையர் (Spitfire) என்னும் வானூர்தி ஓட்டியாக இருந்தார். இவர் 1947ல் அறிவியலில் இளநிலைப் பட்டமும், 1948ல் அறிவியல் முதுநிலைப் பட்டமும், 1950ல் மெக்கில் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பாயில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஓராண்டு கனடாவின் கதிரியக்க ஆய்வகத்தில் (Radiation Lab) பணியாற்றினார். அதன் பின்னர் கனடாவின் ராயல் மிலிட்டரிக் கல்லூரியில் இரண்டாண்டு இயற்பியல் படிப்பித்தார். 1953ல் பாயில் பெல் ஆய்வகத்தில் (Bell Labs) சேர்ந்து அங்கு 1962ல் டான் நெல்சன் (Don Nelson) என்பவருடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும் சிவப்புக்கல் (ரூபி) ஒளிமிகைப்பியைக் கண்டுபிடித்தார். குறைக்கடத்தி ஒளிமிகைப்பி பற்றிய முதல் காப்புரிமத்தில் இவர் பெயர் சுட்டப்பட்டிருந்தார். பின்னர் பெல் ஆய்வகத்தின் கீழியங்கும் பெல்க்காம் (Bellcomm) என்னும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த விண்வெளி புதுப்புலத் தேடுதல் அறிவியல் ஆய்வுகள் துறையின் (Space Science and Exploratory Studies) இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்வழி அப்போலோ விண்வெளித் திட்டத்துக்கு உதவிகள் செய்தார், குறிப்பாக நிலாவில் இறங்குதளங்கள் தேர்வில் உதவினார். பின்னர் 1964ல் பெல் ஆய்வகத்துக்குத் திரும்பி வந்து நுண்மின் தொகுசுற்று ஆய்வு வளர்ச்சியில் பங்கு கொண்டார்.

1969ல் பாயிலும் சியார்ச்சு இ.சுமித்தும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973ல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974ல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006ல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள்.

பாயில் 1975 முதல் அவருடைய ஓய்வு பெற்ற ஆண்டாகிய 1979 வரை பெல் ஆய்வகத்தின் ஆய்வுக்கான செயல்வடிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் கனடாவில் நோவா இசுக்கோசியாவில் உள்ள வால்லசு (Wallace, Nova Scotia) என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து உதவி ஒரு கலைக் காட்சியகத்தைத் துவக்கினார். நோபல் பரிசு பெற்ற, கனடிய அறிவியலாளர் வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் மே 7, 2011ல் தனது 86வது அகவையில், கனடாவில் நோவா இசுக்கோசியா மாநிலத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]