• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய எதிர்மின்னிகளின் அலை இயல்பினைக் கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி நினைவு நாள் இன்று ( மார்ச் 19, 1987).
லூயிஸ் டி ப்ரோக்லி (Louis de Broglie) ஆகஸ்ட் 15, 1892ல் பிரான்ஸ்சில் பிறந்தார். ப்ரோக்லியின் விக்டரின் இளைய மகனான சீன்-மரைடைம், டிப்பேவில் ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்தார். டி ப்ரோக்லி மனிதநேயத்தில் ஒரு தொழிலை நோக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் வரலாற்றில் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் கணிதம் மற்றும் இயற்பியல் நோக்கி தனது கவனத்தைத் திருப்பி இயற்பியலில் பட்டம் பெற்றார். 1914ல் முதல் உலகப் போர் வெடித்தவுடன், வானொலி தகவல்தொடர்புகளின் வளர்ச்சியில் இராணுவத்திற்கு தனது சேவைகளை வழங்கினார்.
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை–துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (wave–particle duality) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும், துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.


இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.


லூயிஸ் டி ப்ரோக்லி 1924ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டத்திற்காக எதிர்மின்னிகளின் அலை இயல்புகளை பற்றி ஆய்வு செய்தார். அலை-துகள்களின் இருமைப் பண்பைப் பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக பிரெஞ்சு அகாதெமியில் டி ப்ரோக்லி கருதுகோள் மூலம் கோடிட்டுக் காட்டினார். ஒளி மட்டுமல்லாமல், அனைத்து பருப்பொருள்களும், அலை-போன்ற தன்மை கொண்டுள்ளன, ஒரு குறிபிட்ட “m” திணிவு கொண்ட துகள், ஒரு குறிப்பிட்ட திசை வேகம் “v” இல் சென்றால், “λ” என்ற அலைநீளம் கொண்ட ஓர் அலை போன்று நடந்துகொள்ளும் என்று கூறினார். ( λ=h/p; p – உந்தம், h – பிளாங்க்கு மாறிலி).
பொருள்களின் அலைகள் (matter waves) டி புறாக்ளி அலைகள் என்றும் இதன் அலைநீளம் டி ப்ரோக்லி அலைநீளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே பொருள்களின் அலைக் கோட்பாடிற்கு முதல் படியாக அமைந்தது. டே பிராலியின் கோட்பாட்டிற்காக அவருக்கு 1929ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952ல் கலிங்கா விருது வழங்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற லூயிஸ் டி ப்ரோக்லி மார்ச் 19, 1987ல் தனது 94வது அகவையில் லவ்சினீஸ்ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.