• Fri. Apr 26th, 2024

சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது-ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

May 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிசூடு.சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டடியுள்ளது
மதுரையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் & போராட்டக் குழு & வழக்கறிஞர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த 3 ஆம் கட்ட குற்றப்பத்திரிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில்
“தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ 3 ஆம் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.குற்றப்பத்திரிக்கையில் ஒரு காவலரின் பெயர் கூட இடம் பெறவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை சி.பி.ஐ வழக்கின் சாட்சியாக மாற்றியுள்ளது.துப்பாக்கி சூடு தொடர்பாக 101 பேர் மீது 16 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.துப்பாக்கி சூடு வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டின் 4 ஆம் ஆண்டு தினமான 22 ஆம் தேதி தூத்துக்குடியில் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். ஒரு நபர் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
சி.பி.ஐ அறிக்கையை நிராகரிப்பு செய்கிறோம், காவல்துறை மீது விசாரணை இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்.சி.பி.ஐ விசாரணையில் குற்றப் புலனாய்வு நடத்தப்படவில்லை.சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது, சி.பி.ஐ யை அனீல் அகர்வால் பின்னிருந்து இயக்கி வருகிறார். தூத்துக்குடியில் இனிமேல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க விட மாட்டோம்.சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என கூறினார்.
பின்னர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த உயிரிழந்த ரஞ்சித்குமாரின் தாய் முத்துலட்சுமி கூறுகையில் “எங்கள் கண்ணீர் குரல் சி.பி.ஐ காதுக்கு எட்டவில்லை, என் மகன் உயிரிழந்ததால் எனக்கு உடல்நல குறைவால் 3 1/2 வருடம் சிகிச்சையில் இருந்தேன், 10 மாதம் பெற்று வளர்த்த மகனை துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்து இருக்கிறேன், அப்பாவி மக்களை காவல்துறை சூட்டு தள்ளி உள்ளது, துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை இன்று சுதந்திரமாக வலம் வருகிறார்கள்” என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *