போடியில் பெண் வனக் காவலரை கொலை செய்த, மதுரை பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர், கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
தேனி மாவட்டம், போடி தென்றல் நகர் தெற்கு தெருவில் வசித்தவர், சரண்யா 27. சில ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் பொண்ணு பாண்டி இறந்து விட்டார். இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தேனியில் வனக்காவலராக சரண்யா, பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்த ஊர் மதுரை. குழந்தைகள் தாய் பராமரிப்பில் உள்ளனர். போடி தென்றல் நகர் தெற்கு தெருவில் சரண்யா, தனியாக வசித்து வந்தார். கணவனை இழந்த சரண்யா, மதுரை பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர் திருமுருகன் 37, என்பவருடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார். இந்நிலையில், திருமுருகன் நேற்று காலையில் சரண்யாவை சந்திக்க, போடிக்கு வந்துள்ளார். இன்று (பிப்.12) காலையில் சரண்யா அவரது வீட்டில் ‘நைட்டி’ உடையில் பிணமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போடி டி.எஸ்.பி., அண்ணாத்துரை (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேதை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த, மோப்பநாய் அங்குமிங்கும் ஓடி கடைசியாக போடி பஸ் ஸ்டாண்டில் நின்றது. இதனால், சரண்யாவை கொலை செய்த குற்றவாளி பஸ் ஏறி, வெளியூர் தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், எப்படியும் போலீசாரிடம் மாட்டிக் கொள்வோம், என்ற பயத்தில் திருமுருகன், மதுரை கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இத்தகவல் உடனே போடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து கண்டறிய போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]