• Sat. Apr 26th, 2025

யூத விரோதத்தை பரப்புகிறது – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

ஐ .நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன் சார் அவரது எக்ஸ் தளப்பதிவில், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. ஐ .நா மனித உரிமைகள் ஆணையத்தில் , இஸ்ரேல் மட்டுமே அதற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20 சதவீதற்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!” என்று பதிவிட்டுள்ளார்.