இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓ.பி.எஸ் எடுக்கும் சில நடவடிக்கைகளால் இ.பி.எஸ் வட்டாம் கலக்கத்தில் உள்ளதாக தகவல்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் தமிழக முழுவதும் பயணம் செய்யப்போவதாகவும், டி.டி.வி மற்றும் சசிகலாவை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். இது தவிர அவரிடம் இன்னொரு பெரிய திட்டமும் இருக்கிறதாம். இட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதே அந்த திட்டமாம். இதற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பதால் அவர்களை தன்பக்கம் கொண்டு வர ஓபிஎஸ் தீவிர முயற்சி செய்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதனால் இபிஎஸ் தரப்பு கலக்கத்தில் இருப்பதாக தகவல்.