நியாய விலை கடை பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூறியதாவது; நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டதைப் போல, நியாய விலை கடை பணியாளர்களுக்கும் 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாக புகார் தெரிவிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் பொருட்களை அனுப்பும் கிடங்குகளுக்கு சென்று ஆய்வு செய்வதில்லை?….அங்கிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சமீபத்தில் செஞ்சி அருகே உள்ள நியாய விலைக் கடையில், தரமற்ற பொருட்கள் விநியோகித்ததாக விற்பனை பணியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இதை கண்டித்தும், ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்யக் கோரியும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் வரும் 16ல், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர்கள் செல்லத்துரை, துரை. சேகர், ஏ.சி.சேகர், மாநில இணைச் செயலர்கள் பொன்.மதி, ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]