நியாய விலை கடை பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூறியதாவது; நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டதைப் போல, நியாய விலை கடை பணியாளர்களுக்கும் 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாக புகார் தெரிவிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் பொருட்களை அனுப்பும் கிடங்குகளுக்கு சென்று ஆய்வு செய்வதில்லை?….அங்கிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சமீபத்தில் செஞ்சி அருகே உள்ள நியாய விலைக் கடையில், தரமற்ற பொருட்கள் விநியோகித்ததாக விற்பனை பணியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இதை கண்டித்தும், ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்யக் கோரியும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் வரும் 16ல், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர்கள் செல்லத்துரை, துரை. சேகர், ஏ.சி.சேகர், மாநில இணைச் செயலர்கள் பொன்.மதி, ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]