வரையாடுகளின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு, மூணாறு ராஜமலை வனப்பகுதி சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் யாரும் இங்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் மிகவும் அரியவகையாக கருதப்படும், வரையாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறை அதிகரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அவைகள் வசிப்பதற்கான தட்ப, வெட்ப சூழ்நிலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறில் மட்டுமே நிலவுகிறது. காடு, மேடு மற்றும் பள்ளத்தாக்கு மிகுந்த பகுதிகளில் ‘ஹாயாக’ சுற்றி வந்தாலும், புலி மற்றும் சிறுத்தை போன்ற காட்டு விலங்களின் பசிக்கு அவ்வப்போது இரையாகி வருவது வேதனையளிக்கிறது. கர்ப்ப காலங்களில் புல்வெளி மறைவுகளில் பிரசவித்தால் ஆபத்து வரும் என கருதி, புத்தி சாலித்தனமாக மலை சரிவில் உள்ள பள்ளத்தாக்கு இடுக்குகளில் பதுங்கி வரையாடுகள் குட்டியை ஈன்றெடுக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு ஈன்றெடுத்த குட்டிகளில், ஒரு சில மட்டுமே வன விலங்குகளிடமிருந்து தப்பி பிழைக்கும். இப்படி தினம்… தினம்…செத்துப் பிழைத்து வரும் வரையாடுகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு, அவைகளை கண்ணும், கருத்துமாக வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். நடப்பாண்டு வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி விட்டபடியால், முன்னதாகவே பெரும்பாலான வரையாடுகள் கர்ப்பமுற்ற நிலையில் காணப்படுகிறது. இதன் நலன் கருதி வனத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் ராஜமலை வனச் சாலையை அடைத்தனர். சுற்றுலா பயணிகள் இங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஆண்டுதோறும் மார்ச் மாதம் வரையாடுகளின் இனப்பெருக்க காலமாகும். இதையொட்டி, 2 மாதங்கள் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. குட்டிகள் வசிப்பதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது, வனச் சாலை திறக்கப்படும். 800க்கும் மேற்பட்ட வரையாடுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]