பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
பாஜக கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வாகினார். இவருக்கு 2008ஆம் ஆண்டு மலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 2017ஆம் ஆண்டு இவர் மருத்துவ காரணங்களுக்காக அந்த வழக்கிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர் இவர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் தொடர்பான விழாக்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் மீண்டும் ஒரு விளையாட்டு விழாவில் பங்கேற்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இந்த முறை அவர் ஒரு உள்ளூர் கிரிக்கெட் விழாவில் பங்கேற்றுள்ளார். அந்த விழாவில் பங்கேற்று அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ட்விட்டரில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால் அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறிவிட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின்பு இந்த மாதிரியான விழாக்களில் பங்கேற்று வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று விளையாட்டு நிகழ்வுகளில் அவர் பங்கேற்பது புதிதல்ல.
இதற்கு முன்பாக அவர் கபடி போட்டி மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீடியோ வேகமாக வைரலானது. அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவருடைய வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது அவர் தன்னுடைய உடல்நிலையை சுட்டிக்காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார் என்பது போன்றும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.பொருள் (மு.வ): அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் […]