இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு நாளுக்கு நாள் மிரட்டும் வகையில் உள்ளன.. இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இப்போது படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் செல்வராகவன் இப்போது சாணிக்காயிதம் படத்தின் போஸ்டர் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.