கோலிவுட்டின் ஆரம்ப காலங்களில், வெளியூர் படப்பிடிப்புகள் ஆனது, உள் மாநிலத்தில் தொடங்கி, உலக நாடுகள் வரை நடைபெற்றது. ஆனால். தற்போதைய கோலிவுட்டில் காட்சிக்கு, காட்சி பல உலக நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது!
திரையில் வெளிநாடுகளின் இயற்கை அழகை கண்டுக்களிப்பதில், நமக்கும் விருப்பம் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் இயற்கை வளங்கள் நிறைந்த உக்ரைனில், தமிழ் உள்பட சில இந்தியப் படங்களின் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணால் பார்த்து நாம் ரசித்த இடங்கள் போர் சூழல் காரணமாக காணாமல் போய் உள்ளன.. விரைவில் இந்த போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு, உக்ரைனில் படமாக்கப்பட்ட இந்திய பாடல்கள் குறித்த ஓர் பதிவு!
வின்னர் (தெலுங்கு)
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், சாய் தரம் தேஜ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் ‘வின்னர்’. இந்தப்படத்தின் மூன்று பாடல்கள் கீவ், லிவிவ் மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள பல அழகான இடங்கள் படத்தில் காட்டப்பட்டன. உக்ரைனில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இது என்று இந்தப் படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.
- சாமி 2 (தமிழ்)
கடந்த 2018 – ம் ஆண்டு விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ஹரி இயக்கத்தில் வெளியானப் படம் ‘சாமி 2’ (சாமி ஸ்கொயர்). தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருந்தார். இந்தப் படத்தில் வரும் “புது மெட்ரோ ரயில்” பாடல் உக்ரைனில் கீவில் படம் பிடிக்கப்பட்டது. - 2.0 (தமிழ்)
ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்து, கடந்த 2018-ம் ஆண்டு வெளியானப் படம் ‘2.0’. இந்தப் படத்தின் ‘ரோஜா காதல்’ என்ற பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது. பின்னர் சில கிராஃபிக்ஸ் பணிகளும் அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தது. - தேவ் (தமிழ்)
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்த தமிழ் திரைப்படம் ‘தேவ்’. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. படத்தின் அதிகபட்ச காட்சிகள் உக்ரைனில் படமாக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல்-ரவுண்டருமான கபில்தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இதுவாகும். - 99 சாங்ஸ் (பான் இந்தியா)
ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரித்த ’99 சாங்ஸ்’ படம், கடந்த 2019-ல் பூசன் சர்வதேச பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. அதன்பிறகு கடந்த வருடம், இந்தப் படம் இந்தியாவில் வெளியாகியது. ’99 சாங்ஸ்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள், உக்ரைனில் நடந்தது. இதில் எஹான் பட், எடில்சி வர்காஸ், ஆதித்யா சீல், லிசா ரே மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர். - ஆர்ஆர்ஆர் (பான் இந்தியா)
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் அடுத்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. உக்ரைனில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் ‘நட்பு’ பாடலும், உக்ரைனில் படம் பிடிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் உக்ரைனில் பிடம்பிடிக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]