தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 16ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்,” என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இன்று (டிச.,12) நாளை 13 மற்றும் 14ம் தேதி: வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.,15 மற்றும் 16ம் தேதி: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.