தேனி மாவட்ட அனைத்து தொழிலாளர் துப்புரவு தொழிலாளர் சங்க, மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களின் நலன் கருதி, ரேன்ஸ் கரண்டி, மண்வெட்டி, தட்டு, சாக்கடை வாரும் கரண்டி மற்றும் கிளவுஸ் (கையுறை) வழங்கவில்லை. இதனால் இந்நகராட்சியில் பணிபுரியும் ஆண், பெண் துப்புரவு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இவர்களின் நலன் கருதி தளவாட பொருட்கள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் தூய்மை பணியாளர்கள் தளவாட பொருட்களுடன் வந்தால் தான் பணி செய்ய முடியும் என மேஸ்திரிகள் ஒருமையில் பேசுவதால் பெண் பணியாளர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இப்படி அவதூறாக பேசி வரும் மேஸ்திரிகளான தமிழகன், செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.260 வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இவர்கள் வேலைக்கும் வருவதில்லை. ஆனால், 100 சதவீதம் வேலைக்கு வருவதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. இதுதவிர ஊதியத்தில் பிடித்து வரும் இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., யிலும் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரித்து மோசடியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
தூய்மை பணியார்களை அடிக்கடி வேலையை விட்டு நீக்குவதும் (பணம் பெறும் நோக்கில்), அவர் களுக்கு பதில் வேறு நபர்களை பணியமர்த்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. குறைந்தபட்ச கூலி சட்டம் அரசாணைப்படி நாளொன்றுக்கு ரூ.577 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பணியாளர் களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்த தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வழங்க வேண்டும். பி.எப்., கடன் தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]