தங்கள் தொகுதியின் எம்எல்ஏ வின் சட்டைகிழித்த பரபரப்பான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூல்லேமனே கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க முதிகெரே எம்எல்ஏ. குமாரசாமி கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ளூர் மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு அவரது சட்டையை கிழித்துள்ளனர். மேலும் யானை தாக்குதலுக்கு எம்.எல்.ஏ. உரிய முறையில் பதிலளிக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.