மாதாந்திர பூஜைக்காக வரும் அக்.17ம் தேதி சபரிமலை ஐப்பன் கோவில் நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்ட் அறிவித்துள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில் “சபரிமலை கோயில் 17ம் தேதி நடை திறக்கப்பட்ட பிறகு அக்.22ம் தேதிவரைபூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன் பதிவு செய்யாதவர்கள் நிலக்கல் பகுதியில் உள்ள நேர டி முன்பதிவு மையங்களில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.