• Sat. Apr 20th, 2024

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்

ByA.Tamilselvan

Oct 13, 2022

திருச்செந்தூர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் நடத்தப்படும் சூரசம்ஹாரம் மிகப்பிரசித்தம் இந்நிகழ்வு கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 30 ம் தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடத்தப்படும் என கோவில்நிர்வாகம் அறிவித்துள்ளது.31ம் தேதி இரவு திருகல்யாணம் நடத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *