மதுரை விமான நிலையம் பகுதியில் அதிக காற்றழுத்தம் மற்றும் வானிலை மற்றும் காரணமாக மதுரையை விமான நிலைய ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் நவி மும்பை, மற்றும் சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

நவி மும்பையில் இருந்து பகல் 1:25 மணிக்கு புறப்பட்டு 3:25 பணிக்கு தரங்க வேண்டிய விமானம் 25 நிமிடத்திற்கு வானில் மூன்று முறை வட்டமடித்தது.

அதேபோல் சென்னையில் இருந்து 2:25 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்தில் 3 35 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் காற்றழுத்தம் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக தரையிறங்க முடியாமல் மூன்று முறை வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.




