புதுச்சேரி என்பது ஆன்மீக பூமியாகத் திகழ்கிறது. இங்கு அரவிந்தர், ஸ்ரீமத் குரு சித்தானந்தர், வண்ணாரப் பரதேசி, சக்திவேல் பரமானந்தா, உள்ளிட்ட பல்வேறு சித்தர்களுக்கு இங்கே ஜீவ சமாதிகளும் உண்டு. புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் புதுச்சேரி வாழ் வெளி மாநிலத்தவர்கள் இந்த ஜீவசமாதிகளை பார்த்து வணங்கிச் செல்வது வழக்கம். இதுபோன்று சித்தர்கள் பூமியாக புதுச்சேரி கருதப்பட்டாலும், சிவபெருமான் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி புதுச்சேரியில் இருப்பது என்பது மேலும் புதுச்சேரிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் கூற சிவபெருமானே திருவாசகத்தை எழுதி அடியில் அவரின் கையெழுத்திட்ட ஓலைச்சுவடி தான் புதுச்சேரியில் உள்ளது என்பது என்றால் அது வியப்பான ஒன்றாகும்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமான எழுதி அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறப்படும் ஓலைச்சுவடி ஒன்று உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடவுள் உண்டா இல்லையா என நினைப்பவர்கள் சிலர் இருக்கும் போது கடவுளே தன் கைப்பட பக்கம் பக்கமாக எழுதிய பின் கையெழுத்து சான்றும் இட்ட ஒரு பனை ஓலைச்சுவடிக் கட்டு இன்னும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள அம்பலத்தடையார் மடத்தில் தான் இந்த ஓலைச்சுவடி பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 3,500 ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட திருவாசக ஓலைச்சுவடி, ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே அவை இருக்கும் வெள்ளி பெட்டியை திறந்து பூஜை செய்யப்படுகிறது.
இந்த செய்தி சற்று வியப்பாக இருந்தாலும் பல ஆண்டுகளாக புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது நிதர்சனமான உண்மை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் மகா சிவராத்திரி அன்று ஓலைச்சுவடியை பார்த்து வணங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவற்றை வணங்கி செல்வது இன்றளவும் வழக்கமாக உள்ளது. மேலும் இந்த ஓலைச்சுவடியை பக்தர்கள் தொட்டுப் பார்க்கவோ அல்லது அதன் அருகில் சென்று வழிபடவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை பக்தர்களுக்கு எட்டாத தூரத்தில் மட்டுமே ஓலைச்சுவடி வைக்கப்பட்டு இருக்கும் இது ஒரு புறம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சிவபெருமான் கையெழுத்திட்ட ஓலைச்சுவடியை கண்டால் சிவனையே நேரில் பார்த்த மாதிரி என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தரிசனம் செய்து வருகின்றனர்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]