2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடன்தான் கூட்டணி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு அம்மாநில அரசில் அமைச்சராக பதவி வகித்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தோபாஷிஸ் பானர்ஜியும், இடதுசாரிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் போரான் பிஸ்வாசும், பாஜக சார்பில் திலிப் சஹாவும் போட்டியிட்டனர்.
அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தோபாஷிஸ் பானர்ஜியை விட 22,980 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார். பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த தோல்வி திரிணாமூல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சாகர்டிகி தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தான் வெற்றி பெற்று வந்தது. அதிலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சாகர்டிகி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாகர்டிகி தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் இழந்துள்ளது.
இந்த தோல்வியால் மிகவும் அதிர்ச்சியடைந்த மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பாஜக தனது வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்துள்ளதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும், பாஜகவின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி இனிமேல் தன்னை பாஜகவிற்கு எதிரான கட்சி என சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மம்தா, பாஜகவோடு, காங்கிரசும், இடதுசாரிகளும் கள்ள உறவு வைத்துள்ளதால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்து தனித்தே போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்றார். மேலும், பாஜகவை எதிர்க்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே சமயம் இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாகவும், மக்கள் ஆதரவுடன் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்றும், ஜனநாயக சக்திகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எளிதில் வீழ்த்த முடியும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மேற்குவங்க மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மம்தா ஒத்துழைப்பு வழங்கவில்லை என தொடர்ந்து காங்கிரஸ் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]
- சோழவந்தானில் எம் வி எம் மருது பெட்ரோல் பங்க் திறப்பு விழாமதுரை மாவட்டம் சோழவந்தானில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே எம் வி எம் பெட்ரோல் பங்க் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..,எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து..!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமியை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் […]
- சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய […]