• Thu. Apr 25th, 2024

புதுப்பொலிவுடன் நெல்லை புதிய பேருந்து நிலையம்: விரைவில் திறக்க வாய்ப்பு

Byகுமார்

Sep 25, 2021

நெல்லை மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்கப்பணிகள் சுமார் 990 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இதில் முக்கிய அம்சமாக சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பாளை பேருந்து நிலையம் மற்றும் வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்திலும் கூடுதல விரிவாக்கப்பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இங்கு வந்து சென்ற பஸ்கள் அருகேயுள்ள ஆம்னி பஸ் நிலையம் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்க்கு எதிரே உள்ள மைதானத்திற்க்கு தற்காலிகமாக மற்றப்படுகின்றன.

வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலைய விரிவாக்கப்பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மும்முரமாக நடந்துவந்தன. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் புதுப்பொலிவுடன் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் ஏற்கனவே 4 பிளாட்பாரம் இருந்த நிலையில் தற்போது இது 6 பிளாட்பாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை நிறுத்த முடியும். பண்டிகை காலங்களில் அதிக பஸ்கள் இயக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசலின்றி செல்லமுடியும்.

பிளாட்பாரங்களில் இருந்து பஸ்களை எடுத்து திருப்பி செல்லும் பகுதியில் அழகிய மினி பூங்கா, மையப்பகுதி நடைமேடைகளில் 2 மெகா சைஸ் ஸ்கிரீன் டிவி, நவீன இருக்கைகள், அகலமான பிளாட்பாரம், சுகாதாரமான கழிப்பறைகள், கூடுதல் கடைகள், ஓய்வு அறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கு சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவ்வாறு திறக்கப்படும் போது நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் .

 

செய்தியாளர்  -சிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *