நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட, கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற கூடுதல் கவனம் தி.மு.க-விடம் இருக்கிறது.
காரணம், கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தி.மு.க கூட்டணியால் வெல்ல முடியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி வருகைக்கு பிறகு, கோவை மாவட்ட தி.மு.க சற்று உற்சாகமடைந்துள்ளது.
கடந்த காலங்களைவிட, தற்போது உடன்பிறப்புகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டுகின்றனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வாங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் தான் நேர்காணல் செய்கின்றனர்.
இதில் உள்ளடி வேலை செய்பவர்களை நேரடியாக எச்சரித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்பதுதான் உடன்பிறப்பிகளின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
கவுன்சிலர் முதல் மேயர் வரை அனைத்து வேட்பாளர்களையும் தலைமைதான் அறிவிக்கும்.” என்று செந்தில் பாலாஜி ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டார். இதனிடையே தலைமை எந்த அறிவிப்பும் கொடுப்பதற்கு முன்பே, நாங்கள்தான் மேயர் வேட்பாளர்கள் என்று சிலர் உலா வருகின்றனர்.
மாநில மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தான் மேயர் வேட்பாளர்” என்று முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம். சாமி என்பவர் ஒரு மேடையில் பேசிய வீடியோ வைரலாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தத் தேர்தலில், உள்ளடி வேலைகளுக்கோ சர்ச்சைக்கும் இடமில்லை என்பதில் செந்தில் பாலாஜி உறுதியாகவே இருக்கிறார். விருப்பமனு கொடுத்த அனைவரையும் அமர வைத்து நேர்காணல் செய்த செந்தில் பாலாஜி, “வேட்பாளரை தலைமைதான் அறிவிக்கும். ஒரு வார்டுக்கு 10 பேர் விருப்ப மனு கொடுத்தாலும்,
ஒருவர் தான் வேட்பாளராக முடியும் என்று எதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். சீட் கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவர்களுக்கு அடுத்தடுத்து தேவையான விஷயங்கள் செய்து கொடுக்கப்படும்.
உதயசூரியன் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து உற்சாகமாக தேர்தல் பணிகளை கவனியுங்கள். சக நிர்வாகிகளுடன் ஒற்றுமையாக இருப்பது மிகவும் முக்கியம். இதையும் மீறி உள்ளடி வேலைகள் செய்பவர்கள், கடந்த காலங்களை போல தப்பிக்க முடியாது.
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும், பாரபட்சமின்றி அவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோவையை தி.மு.கவின் கோட்டையாக்குவது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]