சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது தொடர்பாக, பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் முகக்கவசம் அணியாமல் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த கொடுங்கையூர் போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவரை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலானது! இதற்கிடையில், சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உருத்திரகுமார் மற்றும் பூமிநாதன் என 2 காவலர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், காவல் ஆய்வாளர் நஜீமா,ராஜன் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது கொடுங்கையூர் காவல்நிலையத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]