மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி அதிமுக நிர்வாகியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழத்தில் இணைந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிமுக செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திர பாண்டியன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்து தாய் கழகமான அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் எம்எல்ஏ உசிலம்பட்டி மகேந்திரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.





