அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகைபுரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது.
தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாகவும் , அதிமுக மாபெரும் தொண்டர்களின் இயக்கம்.தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் உறுதியாக எந்த நோக்கத்தோடு எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ, ஜெயலலிதா இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கினாரோ அந்த எண்ணம் உறுதியாக நிறைவேறும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.