அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபாண்டியராஜன் திடீரென்று எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஓ.பி.எஸ் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வீடுகள் பரபரப்பாக இருக்கின்றன. பொதுக்குழு கூட்டம் நடக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோர் தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் ஒற்றைத் தலைமையை நிராகரிக்கும் ஓ.பன்னீர்செல்வம், கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர்.
ஆனால், ஓபிஎஸ் குழுவின் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு கட்டாயம் நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளில் களமிற்கியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் தங்கள் பக்கம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 15 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. இதில், ஓபிஎஸ்ஸ_க்கே ஷாக்கான விஷயம் என்னவென்றால், மாஃபா பாண்டியராஜனின் அணி தாவல் தான்.
ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது கூட இருந்தவர்களில், ஒருவர் கூட இப்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தன்னுடைய ஆதரவை தெரிவித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த அவர், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இப்போது, ஒபிஎஸ் அணியின் பலம் வெகுவாக குறைந்திருப்பதால், அடுத்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை அதிமுகவினரும் அரசியல் நோக்கர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.
- குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த்சின்ஹா வேட்புமனு தாக்கல்..!கடந்த 24ஆம் தேதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]
- எம்.ஜி.ஆர் உயிலை சுட்டிக்காட்டி ட்விட் செய்த கே.சி.பழனிச்சாமி..!அ.இ.அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் பதவியை நெருங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக்கட்டை போட பல்வேறு திசைகளிலும் ஓ.பி.எஸ் […]
- ஓ.பி.எஸ் சுயநலத்துக்காக சாதியை பயன்படுத்துகிறார்..,
திருச்சி குமார் குற்றச்சாட்டு..!ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட […] - இபிஎஸ் ஐ முந்திய ஓபிஎஸ்..மு.க.ஸ்டாலினை முந்திய கமல்ட்விட்டர் கணக்கு வைத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களில் யார் யாரை முந்துகின்றனர் என்றதகவல் வெளியாகிஉள்ளது.ட்விட்டரில் அதிக […]
- மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோமீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் […]
- பாஜகவில் இணைவாரா ஓபிஎஸ் -காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்புஅதிமுக தொண்டர்களை பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்து செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார். அதே நேரத்தில் […]
- பொதுக்குழுவுக்கு நடத்துவதில் சிக்கல் – இபிஎஸ் அதிர்ச்சிஅதிமுக பொதுக்குழுவை நடத்த பள்ளி,கல்லூரிகளில் அனுமதி கிடையாத என்பதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த ஜூன் 23ம் […]
- ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலைதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை […]
- வலிமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி -விஜயபாஸ்கர் பேட்டி“வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று, […]
- காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் […]
- புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் […]
- அதிமுக ஒருங்கிணைப்பாளரர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியதை கண்டித்து மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம்..,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் […]
- அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேருக்கு கொரோனா…சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு […]
- வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வுஇந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் […]
- பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்த கோலிவுட்டின் ‘விக்ரம்’…!பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறினாலே அது பாலிவுட் படங்கள்தான் என்ற நிலையை தென்னிந்திய படங்கள்தான் […]