உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரைக்கு வடக்கே அழகர் மலை அடிவாரத்தில் அமைய பெற்றதும், திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும் புனித ஸ்தலமான அழகர்மலை கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான ஆடிப்பெரும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி உள்ளது.அழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வருடம் அரசின் தளர்வுகள் , விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இக்கோவிலில் கொடி ஏற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.விழாவை முன்னிட்டு முன்னதாக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்கார விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்களுடன் கோவிந்தா கோஷம் முழங்கிட ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் அழகர் மலை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை அடுத்து தினமும் சுவாமிகள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி கோவில் உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4 .35 மணிக்குள் அருள்மிகு சுந்தர்ராஜா பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார் .. தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் திருக்கோவில் நடைபெறும் முக்கிய திருவிழா என்பதாலும், முக்கிய விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதாலும் கோவில் நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் , துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் , பணியாளர்கள் செய்து வருகின்றனர் .
- அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம்.. அதிரடியாக பதிலளித்த சசிகலா..அதிமுக பிளவுக்கு பின்னணியில் திமுக தான் காரணம் என்று சசிகலா செய்தியாளர்களிடம் பகிரங்கமாக சாடியுள்ளார். திண்டுக்கல் […]
- மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்…அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மாயத்தேவர் வயது மூப்பு காரணமாக திண்டுக்கல்லில் இயற்கை எய்தினார். அவரது […]
- எல்லோரும் ஓ.பி.எஸ். தலைமையில் அணிவகுப்பார்கள்எல்லோரும் ஒபிஎஸ் தலைமையில் அணிவகுப்பார்கள் …ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு நிர்வாகிகள் நம்பிக்கைசென்னையில் ஓ.பன்னீர் செல்வம் […]
- தேசிய கொடியை தலைகீழாக … சர்சையில் பா.ஜ.க வைரல் வீடியோநமது தேசிய கொடியை தலைகீழாக பிடித்த பா.ஜ.க -வினரின் வீடியோ வைரலாகி உள்ளது.நாட்டின் 75 வது […]
- இவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்-தேவஸ்தானம்கூட்ட நெரிசல் காரணமாக மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறு […]
- எங்களது ஒரே குறிக்கோள் இது தான்.. செல்லூர் கே.ராஜூஎங்களது ஒரேகுறிக்கோள் எடப்பாடியை பழனிசாமியை முதலமைச்சராக்குவது தான் என செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார்.சசிகலா , தினகரன் […]
- சிறப்பு ரயில்கள் மூலம் 2 மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்!தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை […]
- என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்…சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி […]
- சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து […]
- அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் […]
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]