இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜாவுக்கு சோலைக்குள் நெல்லை அமைப்பு சார்பில் பாராட்டு விழா
நமது பூர்வீக வேளாண் குடிகள் இயற்கை விவசாயத்தையே செய்து வந்தனர். இடைக்காலத்தில் அதிக அளவு உற்பத்தி, குறுகிய கால உற்பத்தி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு ஒட்டு ரகங்களும் அவற்றை விரைவில் வளர்ப்பதற்கு வேதிப் பொருள்கள் நிறைந்த உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் விவசாயத்தில் பயன்படுத்தப் பட்டு வந்தன. இதனால் மனிதர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் அனைத்தும் வேதிப்பொருள்கள் நிறைந்த நஞ்சாக மாறத் தொடங்கியது. இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று புகழப்படும் நம்மாழ்வார் போன்றவர்கள் மீண்டும் இயற்கை விவசாயத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். தமிழகம் முழுவதும் அவரது கொள்கையை பின்பற்றி பலர் இயற்கை விவசாயத்தில் இறங்கத் தொடங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது அதிமுகவின் நெல்லை மாவட்டச் செயலாளராகஇருக்கும் தச்சை கணேசராஜா நம்மாழ்வாரின் கொள்கைகளை பின்பற்றி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.நெல், வாழை,தென்னை, கொய்யா,நெல்லி, நாவல் போன்ற பல்வேறு பயிர்களும், மரங்களும் இவரது தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன. பஞ்சகவ்யம், மீன் கரைசல், அமிர்த கரைசல் போன்ற இயற்கை உரங்களும் இங்கேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நமது பாரம்பரிய நாட்டு மாடு வகைகளும், நாட்டு நாய் வகைகளும் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.இயற்கையையும், இந்த மண்ணையும் நேசிக்கும் இவரை சோலைக்குள் நெல்லை அமைப்பினர் பொன்னாடை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினர். சோலைக்குள் நெல்லை அமைப்பின் நிறுவனர் பொறியாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் விநாயகம், பத்மகுமார் மற்றும் ராஜகோபால், முத்து குட்டி பாண்டியன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]