பேரழகனே..,
நானும் உன் நினைவுகளின்
எண்ணங்களை
கொஞ்சம் மறந்திடலாமென
மனதோடு உரையாடியே
ஒப்பந்தமிட்டாலும்
மறுபடியும் தோற்றே …தான்
போகிறேன்..
மறுநொடியே
ஏவி விட்டது போலவே..
காற்றோடு தேடிவந்து..
விழுகின்றது…
இந்தப் பாடல் …
பற்றிக்
கொண்டது மீண்டும்
இதோ
உன் எண்ண அலைகள்
என் பேரழகனே
கவிஞர் மேகலைமணியன்