30 ஆண்டுகளுக்கு பின்னர் பல லட்சம் பொருட்கள் செலவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது .ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா மொடக்கூர் மேல்பாக்கம் கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ வெள்ளை எருது பெருமாள்,அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமிகள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.விழா நடைபெற்ற கல்லாங்காடு வலசு என்ற பகுதியானது கடந்த 30 வருடங்களாக யாரும் குடி இல்லா வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவ்வூரில் வசித்து வந்த பக்தரிடம் கனவில் தோன்றிய சுவாமி 30 வருடங்களுக்கு முன்பாக இருந்தவர்கள் ஊரை விட்டு சென்றதனால் அவ்வூரில் வசித்து வந்தவர்கள் தற்பொழுது வெளியூரில் அவதிப்பட்டு வருவதாகவும் சிரமத்திற்கு உள்ளாகியும் உடல் நோய் வாய்புற்றும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தது. இதற்கு தீர்வாக அந்த ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் கூடி அங்கு ஒரு கோயிலை கட்டி எனக்கு ஒரு வழிபாடு செய்தால் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு விமேசனம் கிடைக்கும் என கனவில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் முன்னர் வசித்து வந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஒரு கோவிலை கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பல லட்சம் பொருட்செலவில் கோவிலின் கட்டிட வேலைகள் முடிந்து நேற்று மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னதானம், பிரசாதங்கள் உள்ளிட்டவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக பல்வேறு புன்னிய தளங்களிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு கோவில் கோபுர கலசங்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு கன்னி பூஜை,கோமாதா பூஜா,சிறப்பு யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற தேவராட்டம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் […]
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]
- ராகுல் காந்திக்கு சிறை தண்டனை -கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் […]
- இன்று மற்றொரு பூமி-சனியின் துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம்டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் […]
- மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோமதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் […]
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]