திமுக துணைப்பொதுச்செயலாளராக கனிமொழியை தேர்வு செய்யவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுகவில் உதயநிதியை முன்னிலைப்படுத்தி கனிமொழியை ஸ்டாலின் புறக்கணிப்பதாக புகார் எழுந்த நிலையில் புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக கனிமொழியை தேர்வு செய்ய அவரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி துக்கியுள்ளனர்.சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கனிமொழியின் சூறாவளி பிரசாரத்தை சுட்டிக்காட்டி இவரை விட தகுதியானவர் யார் என கேள்வி எழுப்புகின்றனர். கனிமொழிக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா அல்லது ஓரங்கங்கட்டப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.