திமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் . இந்நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 1977ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்புலட்சுமி அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவர் 1996ல் மொடக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் திமுகவில் பலவேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்படத்தக்கது.