லட்சக்கணக்காக சம்பாதிக்கும் ஐ.டி.துறையை ஒதுக்கி விட்டு, பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை அங்காடி நடத்துவது அனைவரையும் வியக்க வைக்கிறது.
நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் எம்.சி.ஏ பட்டதாரி விக்னேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் லட்சத்தில் சம்பளம் பெற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, தனது வேலையை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின்போது இனி வரும் நாட்களில் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்த கூடாது என முடிவெடுத்தார். அதன்படி அத்தியாவசிய பொருட்களான சோப்பு, ஷாம்பு போன்றவை கூட இயற்கை பொருட்களை பயன்படுத்த துவங்கினார்.
அதுமட்டுமின்றி தனது தாய் தந்தையரையும் பயன்படுத்த வைத்தார். முகபூச்சு பவுடர், இயற்கை ஹேர் டை, சிறுதானிய உணவுகள், மரப்பொருட்கள் என அனைத்தையும் இயற்கை பொருட்களையும் பயன்படுத்த துவங்கினார். இவரை முதலில் ஆச்சரியமாக பார்த்த அவரது உறவினர்கள், பின்னர் சில நாட்களில் அவர்களும் இயற்கை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு மற்றும் குளியல் சோப்புகளை விக்னேஷிடம் வாங்க தொடங்கினர். நாளடைவில் இதனை ஏன் நாமே தொழிலாக தொடங்கக் கூடாது என எண்ணிய விக்னேஷ். அதன்படி தன்னிடம் உள்ள சிறிய தொகையை வைத்து தனது சொந்த ஊரான அக்கியம்பட்டியிலேயே சிறிய அளவிலான இயற்கை அங்காடியை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இயற்கை பொருட்களை வாங்க தொடங்கியதால் நாமக்கல்லில் பெரிய அளவில் கடையை தொடங்க ஆயத்தமானார். அதன்படி அக்கியம்பட்டியில் கிடைத்த லாபத்தை வைத்து கடந்த ஆண்டு நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலின் அருகே “பாலா இயற்கை அங்காடி” என்ற பெயரில் இயற்கை பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினார்.
இந்த கடையில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு, சோப்பு, ஹேர் டை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், பழைமையான அரிசி வகைகள், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள், வாழை நார் கொண்டு செய்யப்பட்ட கைவினை பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட கலன்கள், பாத்திரங்கள், பானைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். இவரின் இந்த இயற்கை அங்காடி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]