நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா காப்பு கட்டும் ரசீதில் முறைகேடு ? மாரியம்மன் கோவில் எழுத்தரை பணியிட மாறுதல் செய்ய பரிந்துரை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி தங்களது 15 நாள் விரதத்தை தொடங்கினர்.இதில் காப்பு கட்டுவதற்கு 20 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது இந்நிலையில் மாரியம்மன் கோவில் எழுத்தர் முனியாண்டி காப்புக் கட்டும் ரசீதை ஜெராக்ஸ் எடுத்து வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதன் பெயரில் திண்டுக்கல் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் பாரதி உத்தரவின் பெயரில் நத்தம் மாரியம்மன் கோவில் மற்றும் அலுவலகத்தில் உதவி ஆணையர் சுரேஷ் விசாரணை செய்தார். விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கு ஆளான எழுத்தர் முனியாண்டி தனது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பணிக்கும் வராமல், விசாரணைக்கும் ஆஜராகவில்லை எனவே திண்டுக்கல்
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி கமிஷ்னருக்கு எழுத்தர் முனியாண்டியை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார். மேலும் விசாரணைக்குப் பின்பு தவறு நடந்திருப்பது உறுதியானால் எழுத்தர் முனியாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர். நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் எழுத்தர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் வந்துள்ளது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் முனியாண்டி கடந்த 10 ஆண்டுகளாக நத்தம் மாரியம்மன் கோவிலில் எழுத்ததாக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்