மதுரை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் நாள் 1615 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளிலுள்ள 322 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19ஆம் நாள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 57.09 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள 17ஆவது வார்டுக்கு நடைபெற்ற மறுதேர்தலில் 73.55 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
மதுரை மாநகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 13, 43, 694 பேர். வாக்களித்தோர் 7, 25, 396 (53.99%). மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 1, 15, 323 பேர். வாக்களித்தோர் 82, 255 (71.33%) பேர். மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 1, 13, 069 பேர். வாக்களித்தோர் 89, 799 பேர் (79.42%). ஆக, மாவட்டம் முழுவதும் மொத்த வாக்காளர்கள் 15, 72, 086 பேர். பதிவான வாக்குகள் வாக்களித்தோர் 8 97, 450 பேர் (57.09%).
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது.. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளும், மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சிகளில் 78 வார்டுகளும், பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், அ.வல்லாளபட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் எழுமலை பேரூராட்சிகளில் 144 வார்டுகளும் என மொத்தம் 322 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது!
மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை மண்டலம் 1இல் உள்ள 24 வார்டுகளில் பதிவான வாக்குகள் பாத்திமா கல்லூரியிலும், மண்டலம் 2 இல் உள்ள 25 வார்டுகள் வக்பு வாரிய கல்லூரியிலும், மண்டலம் 3இல் உள்ள 25 வார்டுகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் மகளிர் கல்லூரியிலும், மண்டலம் 4இல் உள்ள 26 வார்டுகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் எண்ணப்படுகின்றன.
பேரூராட்சி, நகராட்சிகளில் அஞ்சல் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்படுவதுடன் அவை எண்ணப்பட்டு, அறிவிக்கப்படும். பதிவான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்படும். மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை அந்தந்த வார்டுகளுக்கான அஞ்சல் வாக்குகள் எண்ணத் தொடங்கி, 30 நிமிடங்களுக்குப் பின்னரே மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் மேற்கண்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் 12 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுள் 104 மேசைகளிலும், அதே போன்று நகராட்சிகளில் பதிவான வாக்குகள் மூன்று மையங்களில் 3 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு 20 மேசைகளிலும், பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 2 மையங்களில் 9 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு 21 மேசைகளிலும் எண்ணப்படுகின்றன. மதுரை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 561 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு மாநகராட்சியைப் பொறுத்தவரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாகவும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாகவும் படிவம் 27இல் உடன் வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிக்கப்படும். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் குறித்த விபரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]