• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் இந்த பொருட்களுக்கு மட்டும் 5 ஆண்டுக்கு தடை..

உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை காக்க மலிவுவிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி மற்றும் சுங்க துறை வாரியம் தெரிவித்துள்ளது.

உருளை வடிவிலான அலுமினியம், சோடியம் ஹைட்ரோ சல்பைட், சிலிகான் சீலன்ட், ஹைட்ரோ புளோரோ கார்பன், காம்போனென்ட் ஆர். 32 ஹைட்ரோபுளோரோ கார்பன் சேர்மம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.


இந்த பொருட்கள் இந்திய சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு சீனா ஏற்றுமதி செய்தது தெரியவந்தது. இதனால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.