நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே.
பாடியவர்: பதுமனார்
திணை: நெய்தல்
விளக்கம் :
தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பொருள்;
“இருட்டை உடையது இந்த இரவு. இந்த யாமத்தில் பேசுதல் அடங்கி, இனிதாய் அடங்கினர் மக்கள்;. உயிரினங்கள் வெறுப்பில்லாமல், பரந்த இடத்தையுடைய உலகத்தில் உறங்குகையில், நான் ஒருத்தி மட்டும் தூங்காமல் தனித்திருக்கிறேன்.”