• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் அதிமுக வெற்றி பெற்றால் நிர்வாகிகளுக்கு பரிசு

Byவிஷா

Apr 3, 2024

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால், சிறப்பாகப் பணியாற்றிய நகரச் செயலாளருக்கு இன்னோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 பவுன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது.
அதிமுக சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் ப.கருப்பையா என்பவர் போட்டியிடுகிறார், இவரை ஆதரித்து திருச்சி தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, திருச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை வெற்றிபெற வைக்க வேண்டும். அப்போது அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும், வட்ட செயலாளர்களுக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.