நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பயணம் செய்து குறைந்த நேரத்தில் சென்னையைச் சென்றடைந்தது வைகை எக்ஸ்பிரஸ். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்திருப்பதாக ரயில் ஆர்வலர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக பயணிகளுக்குப் பெரும் சேவையாற்றி வரும் வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது வரை 44 ஆண்டுகளாக மதுரை மக்களின் ரயில் பயணத்திற்குப் பெரும் சேவையாற்றி வருகிறது.
ஒவ்வொரு நாளும் மதுரையிலிருந்து வழக்கமாக காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையைச் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வந்து சேரும். மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள்.
இந்நிலையில் நேற்று (03/03/22) மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், இயந்திரக் கோளாறு காரணமாக காலை 7.26க்குப் புறப்பட்டது. ஆனால் சென்னைக்கு சென்றடைய வேண்டிய வழக்கமான நேரமான பிற்பகல் 2.30க்கு முன்னரே 2.07க்கு சென்னை எழும்பூரைச் சென்றடைந்து, மதுரை-சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘இந்திய ரயில்வேயில் இந்த பயண தூரம் வரலாற்று சாதனையாகும். மேலும் வைகை எக்ஸ்பிரஸ் அது துவங்கப்பட்ட நாளான 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் 7 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடி சாதனை படைத்திருந்த நிலையில், வைகை எக்ஸ்பிரஸ்க்கு என்று ரயில்வேயால் நிர்ணயம் செய்யப்பட்ட அதே 110 கி.மீ. வேகத்தில் நேற்று 6 மணி 40 நிமிடங்களில் சென்னை எழும்பூரைச் சென்றடைந்தது வரலாற்று சாதனையாகும்.
வடமாநிலங்களில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மணிக்கு சராசரியாக 130 கி.மீ. நிர்ணயம் செய்யப்பட்டு, ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்கு ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ்சின் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலும்கூட குறைந்த நேரமானதற்கு மிக முக்கியக் காரணம், தென்னக ரயில்வேயின் மதுரை, திருச்சி மற்றும் சென்னைக் கோட்டங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்த் திறமையே அடிப்படைக் காரணம். 300 கி.மீ தூரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் 25 நிமிட தாமதத்தைச் சரி செய்து தெற்கு ரயில்வே சாதனை படைத்திருக்கிறது. ரயில்வேயின் அனைத்து துறைகளுடைய ஒருங்கிணைப்பின்றி இது சாத்தியமில்லை’ என்றார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரமும் சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரமும் கடக்கின்றன. ஆனால் வைகை எக்பிரஸ் விட இந்த ரயில்களில் நிறுத்தங்கள் மிக குறைவாகும். தமிழ்நாட்டில் ஓடும் இந்த ரயில்களோடு ஒப்பிடும்போது வைகை எக்ஸ்பிரஸ் சாதனைக்குரிய தொடர்வண்டி ஆக தன் பெருமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]