ஹவாய் தீவில் உள்ள மவுனாலாவோ எரிமலை 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துள்ளது.இந்த எரிமலை பெரிய அளவில் சாம்பலை கக்கி வருகிறது. இதனால் வனப்பகுதியில் எரிமலைக்குழம்புகள் படிந்துள்ளதாக கூறும் அதிகாரிகள், மாற்றங்களை ஏற்பட்டால் அதை சமாளிக்க அப்பகுதி மக்கள் தயாராக இருக்கும் படி தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் 18நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அவை ரிக்டர் அளவுகோலில் 3க்கும் குறைவாக பதிவாகிஉள்ளது.