நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை தாம்பரத்திற்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்.ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை.
சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என்றால் 155 ரூபாய் மட்டுமே.நாகர்கோவிலில் மாலை மணி 03.50 க்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலி 05.10pm , மதுரை 08.30pm , திருச்சி 10.45pm தஞ்சாவூர் 11.38pm விழுப்புரம் 04.40am மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடைகிறது. பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள்,குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திகொள்ளலாம்.