பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி .ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் (பேட்டி பச்சாவோ) என்று வெற்று முழக்கங்களை எழுப்புபவர்கள் தான் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுகிறார்கள். இன்று நாட்டில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. பில்கிஸ்பானுவுக்கு நீதி வழங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.