• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு நிதி உதவி

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

நேரு நினைவுக் கல்லூரி மாணவிகளின் ஆய்வுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிதி உதவி
நேரு நினைவு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை இயற்பியல் பயிலும் M.சரிகா மற்றும் J.பிரவினா ஆகிய மாணவிகள் கிரீன் நானோ தொழில்நுட்பம் மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்னர் ஆய்வு சுருக்கம் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு சுருக்கத்தை பரிசீலித்து, இந்த ஆய்வு செய்வதற்காக 7500 நிதியுதவி அளித்துள்ளது. இந்த இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டினார். இந்த உதவி தொகை பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவர், செயலர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் பாராட்டினர்