திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் விடப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், அடகு வைத்த 50 பவுன் தங்க நகைகளை முறைகேடாக ஏலம் – பாதிக்கப்பட்டோருக்கு இரு மடங்கு நகைகளை கொடுக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்காக ரூபாய் 50,000/-ம், அடமான நகைகளுக்கு 9சதவீதம் வட்டி மட்டுமே வாங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஐஐஎஃப்எல் நிதி நிறுவனத்தில், மதுரை திருநகரை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி 50 பவுன் நகைகளை அடமானம் வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், அவர் நகைகளை திருப்ப சென்ற போது உங்களுடைய நகை எங்களுடைய கணினி இயந்திரத்தில் காண்பிக்கப்படவில்லை என மெத்தனமாக பேசியதுடன், நகைகள் ஏலம் போய் விட்டதாகவும் தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த சியாமளா, இதுகுறித்து மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கிடைத்துள்ள நிலையில், நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது:
ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் சட்ட விரோதமாக ஐஐஎஃப்எல் நிதி நிறுவனம் செயல்பட்டதாகவும், ஏலம் போவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப தவறியதும், மேலும் ஏலம் போவதற்கான விளம்பரத்தை நாள்தோறும் மக்கள் பார்வைக்கு வரும் நாளிதழ்களில் வெளியிட வேண்டும், அதற்கு மாறாக மக்கள் பார்வையிடாத பத்திரிக்கையில் விளம்பரம் அளித்ததை கண்டித்தும் ,பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அடகு வைத்த நகையை விட இரு மடங்கு நகை அதாவது 100 பவுன் தங்க நகைகளை வழங்க வேண்டும் , மேலும் வாடிக்கையாளருடைய மன உளைச்சலுக்கு ரூபாய் 50,000/-ம், அடமான நகைகளுக்கு 9 சதவீத வட்டி மட்டுமே வாங்க வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]