பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரபல இயக்குனர் வினோத் காபிரி, குஜராத் பைல்ஸ் என்ற படத்தை எடுக்க தயார், அதை வெளியிட அனுமதி தரமுடியுமா என சவால் விட்டுள்ளார்.
காஷ்மீர் கலவரத்தில் அங்குள்ள இந்துக்கள் துரத்தப்பட்ட நிகழ்வை காஷ்மீர் பைல்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர். உண்மையை மேலோட்டமாக தூவி, ஐந்து முதல் எண்பது வயது வரையான அனைத்து முஸ்லீம்களும் மோசம் என்ற வெறுப்பு அரசியலை நிறுவும் இந்தப் படத்தை பிரதமரே முன்னின்று பிரமோட் செய்து வருவதாக இணையத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்துள்ளன. வரிச்சலுகை, படத்தைப் பார்க்க மாநிலம் தழுவிய விடுமுறை, காவல்துறையினர் படத்தைப் பார்க்க விடுப்பு என பாஜக ஆளும் மாநிலங்கள் காஷ்மீர் பைல்ஸ் படத்தை தங்களின் மத அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றன என விவாதங்கள் இணையத்தில் வெடித்துக் கொண்டிருக்க. பிரபல இயக்குனர் வினோம் காபிரி பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
குஜராத் பைல்ஸ் என்ற பெயரில் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், பிரதமரின் பங்களிப்பையும் உள்ளடக்கிய படத்தை எடுக்க நான் தயார். இது பற்றி நான் தயாரிப்பாளர்களிடமும் கலந்து பேசினேன். அவர்கள் தயார். ஆனால், படத்தை வெளியிட பிரதமர் அனுமதிப்பாரா என்று உறுதிமொழியை மட்டும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கோத்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வெளிநாடுகளின் முன்னால் எந்த முகத்துடன் செல்வேன் என வாஜ்பாய் வருத்தப்பட்டார். அந்த கொடூரமான கொலைகளை படமாக எடுப்பது குறித்துதான் வினோத் இப்படியொரு சவாலை விடுத்துள்ளார்.
வினோத் இயக்கிய Can’t Take This Shit Anymore ஆவணப்படம் தேசிய விருதை வென்றது. அவரது முதல் சினிமாவான Miss Tanakpur Haazir பல விருதுகளை வென்றது. கொரோனா பெருந்தொற்றின் போது மக்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து சென்றதை 1232 Kms என்ற ஆவணப்படமாகவும் இவர் எடுத்துள்ளார் என்பது முக்கியமானது.

- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]