திருப்பூர் அருகே செல்போன் டவர் மீது ஏறிய குடிபோதை ஆசாமி போலீசாருக்கு மிரட்டல் விட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே அப்பியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கார்த்திகேயன்(30). இவர் சனிக்கிழமை மது அருந்தி விட்டு, டூவீலரில் வந்தார். அப்போது கருக்கன்காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி பொதுமக்களை தகாத வார்த்தை பேசி தகராறு செய்துள்ளார்.
இதையறிந்த போலீசார் டூவீலரை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். இதையடுத்து, நேற்று மதியம் மீண்டும் மது அருந்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்ற கார்த்திகேயன் டூவீலரை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு போலீசார் வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளதால், அங்கு சென்று கேட்டு வாங்குமாறு கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த கார்த்திகேயன் பெருமாநல்லூர் சந்தைபேட்டை அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி உடனடியாக தனது வாகனத்தை கொடுக்காவிட்டால் கீழே குதித்து விடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அவரை மீட்டனர் இச்சம்பவம் பெருமாநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]