• Sat. Apr 27th, 2024

சபரிமலையில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

ByA.Tamilselvan

Nov 25, 2022

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *