ஜனவரி 3, 2022 ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதுபோன்று முன்னெச்சரிக்கை டோஸ் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போடப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று 16ஆவது முகாம் நடைபெற்றது.சென்னை அடையாறு பகுதியில் நடைபெற்ற முகாமில் ஆய்வு மேற்கொண்டபின்செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33.20 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதியே தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளுக்கே சென்றும், தடுப்பூசிமுகாம்கள் மூலம் சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்பதால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 29 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் 7 முதல் 8 லட்சம் டோஸ்கள் போட்டு முடிக்கப்படும் 22 லட்சம் டோஸ்தான் மீதமிருக்கும்.அதன்படி 33 லட்சம் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதால், கூடுதலாக 10 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி தேவைப்படும்.
இதை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். முழுவீச்சில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.தமிழகத்தில் 8.14 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை 84.87 சதவிகிதப் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 55.85 சதவிகிதப் பேரும் செலுத்தியுள்ளனர். 95 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் விரைவில் செலுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்குத் தமிழகத்தில்தான் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முதல் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. மொத்தம் 6,18,700 கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்