• Tue. Apr 23rd, 2024

புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை கூட்டம்

CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்ப்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் CPS திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி ஓய்வுதியத் திட்டத்தை தாமதிக்காமல் அமல்படுத்தவேண்டும் எனவும், புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதியத் திட்டத்தை கொண்டுவந்து
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, வாழ்வாதார கோரிக்கையான ஓய்வுதியத் திட்டத்தை அமல்ப்படுத்தவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் இந்த சட்டத்தை ரத்து செய்யும்வரை பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவும் இந்த கூடத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *